Day: December 14, 2020
ஜனாதிபதியின் முடிவை எதிர்த்து உணவக உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
பரிசில் இன்று திங்கட்கிழமை உணவக உரிமையாளர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உணவகங்களை மீண்டும் திறக்க அனுமதிக்கவேண்டும்! என அவர்கள் கோரிக்கை வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். பகல் 1 மணிக்கு Place des Invalides பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. உணவக உரிமையாளர்கள்மேலும் படிக்க...
பரிஸ் உதைபந்தாட்ட கழகத்தின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் மரணம்
பரிஸ் உதைபந்தாட்ட அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் Gérard Houllier மரணமடைந்துள்ளார் நேற்று ஞாயிற்றுக்கிழமை இவர் தனது 73 ஆவது வயதில் உடல்நலக்குறைவால் இயற்கையெய்தியதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவர் PSG அணி உட்பட OL மற்றும் Liverpool ஆகிய அணிகளுக்கும் பயிற்சிவிப்பாளராகமேலும் படிக்க...
ஃபைசர்- பயோஎன்டெக் தடுப்பூசி பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்தது சிங்கப்பூர்!
ஃபைசர்- பயோஎன்டெக் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி பயன்பாட்டுக்கு, சிங்கப்பூர் ஒப்புதல் அளித்துள்ளது. டிசம்பர் மாத இறுதிக்குள் முதல் தடுப்பூசி போட எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் லீ ஹ்சியன் லூங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இந்தமேலும் படிக்க...
பயங்கரவாத பட்டியலில் இருந்து அமெரிக்கா சூடானை நீக்கியது!
கார்ட்டூமில் உள்ள தூதரக தகவலின் படி, அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் பட்டியலில் இருந்து சூடானை அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த ஒக்டோபர் மாதம் பயங்கரவாத பட்டியலிருந்து சூடான் நீக்கப்படுமென உறுதியளித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1998ஆம்மேலும் படிக்க...
ஊழல் பேர்வழிகளை ஒழித்துக் கட்ட நேரம் வந்து விட்டது – கமல்ஹாசன்
ஊழல் பேர்வழிகளை ஒழித்துக்கட்ட நேரம் வந்துவிட்டதாக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற பெயரில் தேர்தல் பிரசார பயணத்தை ஆரம்பித்துள்ள கமல், தொழில் வர்த்தக சங்கத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்படி குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
இந்தியாவின் முதல் தயாரிப்பு: அதி திறன்கொண்ட போர்க்கப்பல் நாட்டிற்கு அர்ப்பணிப்பு!
இந்தியாவில் முற்றிலும் கட்டப்பட்டுள்ள முதலாவது நவீன 17-ஏ ஃபிரிகேற் (17A FRIGATE) ஏவுகணை தாங்கிக் போர்க் கப்பல் இந்தியக் கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் நடந்த நிகழ்வில், முப்படைத் தலைமைத் தளபதியின் துணைவியார் மதுலிகா ராவத் கப்பலை வழங்கிவைத்தார். இந்திய மதிப்பில் 19மேலும் படிக்க...
தமிழக மீனவர்கள் 27 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 400 படகுகளில் சென்றிருந்த மீனவர்கள் கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீன்பிடியில்ஈடுபட்டிருந்தனர். இதன்போதே, 27 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் பறிமுதல் செய்யப்பட்டமேலும் படிக்க...
யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிவித்தல்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட இறுதியாண்டு சிறப்புக் கற்கை மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய நாளை 15 ஆம் திகதி, முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இது தொடர்பில் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப்பிரிவு செய்திக்மேலும் படிக்க...
7ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி.வள்ளியம்மை கதிர்காமு (14/12/2020)
தாயகத்தில் இளவாலையைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் பாரிஸ் நகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி.வள்ளியம்மை கதிர்காமு அவர்களின் 7ம் ஆண்டு நினைவு தினம் 14ம் திகதி டிசம்பர் மாதம் திங்கட்கிழமை அன்னாரின் இல்லத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது. அமரர்.திருமதி.வள்ளியம்மை கதிர்காமு அவர்களை நினைவு கூருபவர்கள். அன்புப் பிள்ளைகள்மேலும் படிக்க...
பிரித்தானிய பிரபல உளவு எழுத்தாளர் ஜான் லெ காரே காலமானார்!
பிரித்தானியா உளவு எழுத்தாளர் ஜான் லெ காரே, தனது 89ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை என அவர் நடத்திவரும் நிறுவனம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எழுத்தாளரின் குடும்பமும் அவர் நிமோனியாவால் இறந்துவிட்டதாக ஒரு அறிக்கையைமேலும் படிக்க...
வர்த்தகப் பேச்சு வார்த்தைகளை நடத்த ஒப்புதல்: பிரித்தானியா-ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு!
பிரெக்ஸிற்றுக்குப் பின்னரான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன ஒப்புக்கொண்டுள்ளன. வர்த்தகப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வது குறித்து ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சனும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயனும் முன்னர் அறிவித்திருந்தனர்.மேலும் படிக்க...
அமெரிக்காவில் இன்று முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிப்பு
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் இன்று (திங்கட்கிழமை) முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுமேலும் படிக்க...
உலகளவில் ஐந்து கோடிக்கும் மேற்பட்டோர் கொவிட்-19 தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்!
உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து ஐந்து கோடிக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர். மொத்தமாக இதுவரை உலகளவில் வைரஸ் தொற்றினால், ஏழு கோடியே 26இலட்சத்து 46ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் 16இலட்சத்து 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகளவில்மேலும் படிக்க...
மம்தா பானர்ஜியை கூலிப்படை மூலம் கொலை செய்ய பா.ஜ.க திட்டமிட்டுள்ளது- சுப்ரதா முகர்ஜி
மம்தா பானர்ஜி அரசை சட்டசபை தேர்தலில் தோற்கடிக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளதாகவும், அது நடைபெறாத பட்சத்தில் அவரை கூலிப்படை மூலம் கொலை செய்ய பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சுப்ரதா முகர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்காள மாநிலத்தில் இடம்பெற்ற விழாவொன்றில்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் : குணமடையும் நாடுகளின் வரிசையில் இந்தியா முன்னிலை
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 27 ஆயிரத்து 336 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 98 இலட்சத்து 84 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 93மேலும் படிக்க...
வவுனியா சிறைச்சாலையில் ஒருவருக்கு கொரோனா
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருகோணமலையை சேர்ந்த இவருக்கு, கடந்த 12ஆம் திகதி பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்வதற்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) பரிசோதனைக்கான முடிவுகள் கிடைக்கப்பெற்றது. அதில் அவருக்கு, கொரோனாமேலும் படிக்க...
மக்களின் பிரச்சினைகள் குறித்து மௌனம் காப்பவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியில் வர வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்
அரசாங்கத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கால்நடை பண்ணையாளர்களின் துன்பங்களை நிவர்த்தி செய்வதாக இருந்தால் இந்த அரசாங்கத்துடன் பேச வேண்டும், இல்லையென்றால் இந்த அரசாங்கத்தைவிட்டு வெளியில் வரவேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். மயிலத்தமடு, மாதவனை பகுதியில்மேலும் படிக்க...
ஜனவரி முதல் படிப்படியாக சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டினை திறக்க நடவடிக்கை – அமைச்சர்
2021 ஜனவரி முதல் நாட்டினை படிப்படியாக சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கலந்துரையாடலை அடுத்து கருத்து தெரிவித்த அவர், இந்த முடிவு சுகாதார வழிகாட்டுதல்களின்படிமேலும் படிக்க...