Day: October 1, 2020
பரிஸ் கத்திக்குத்து: முக்கிய குற்றவாளிக்கு எதிராக பயங்கரவாதக் குற்றச்சாட்டு பதிவு
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் சார்லி ஹெப்டோ பத்திரிகையில் வெளியான கேலிச் சித்திரத்துக்கு எதிரப்பு தெரிவித்து, இரு சகோதரர்கள் கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது. பத்திரிகையின் முன்னாள் அலுவலகம் அமைந்துள்ள வீதியில்மேலும் படிக்க...
சிவாஜி கணேசன் பிறந்தநாள்: துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள் மரியாதை
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 93ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அடையாரில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள அன்னாரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மலர்மேலும் படிக்க...
கொரோனா வைரஸின் வளர்ச்சி குறைந்து வருகின்றது: ஆய்வில் தகவல்!
கொரோனா வைரஸின் வளர்ச்சி குறைந்து கொண்டிருக்கக்கூடும் என இங்கிலாந்தில் தொற்றுநோயைப் பற்றிய மிகப்பெரிய ஆய்வு தெரிவிக்கிறது. லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் ஒரு குழு, நாடு முழுவதும் இருந்து சீரற்ற முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 84,000 பேரின் மாதிரிகளை ஆய்வு செய்தது. பகுப்பாய்வில் பயன்படுத்தப்பட்டமேலும் படிக்க...
28,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்யப் போவதாக வால்ட் டிஸ்னி அறிவிப்பு!
பொழுதுபோக்கு துறையின் ஜாம்பவனான வால்ட் டிஸ்னி நிறுவனம், 28,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. பெரும்பாலும் இந்த பணிநீக்கங்கள் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புளோரிடா மற்றும் கலிபோர்னியாவில் இருக்கும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதில் 67 சதவீத பகுதிநேர வேலைமேலும் படிக்க...
பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை ஏழு வீதம் அதிகரிப்பு!
நாட்டில் கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிராக நடந்த குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை 7 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொருநாளும் சராசரியாக 87 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அந்த காப்பகம் குறிப்பிட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குமேலும் படிக்க...
தொற்றுகள் அதிகரிப்பு: ஸ்பெயினில் முடக்க நிலையை அமுல்படுத்த உத்தரவு
தொற்றுகள் அதிகரித்த பின்னர் கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தலைநகர் மட்ரிட் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் முடக்கநிலையை அமுல்படுத்துமாறு ஸ்பெயின் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகளின் கீழ், குடியிருப்பாளர்கள் ஒரு அத்தியாவசிய பயணத்தை மேற்கொள்ளாவிட்டால் அந்த பகுதியை விட்டு வெளியேற அனுமதிக்கப்படமேலும் படிக்க...
எஸ்.பி.பியுடன் 52 நாட்கள் :வைத்தியரின் பதிவு!
தனியார் மருத்துவமனையில் பாடகர் எஸ்.பி.பி.க்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் தீபக் சுப்ரமணியன் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவென்றை இட்டுள்ளார். குறித்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது. குறித்த பதிவில், “ஒகஸ்ட் 3 அன்று எஸ்.பி.பி. சார் எனக்கு போன் செய்தார். காய்ச்சல்மேலும் படிக்க...
எஸ்.பி.பி பிழைக்க மாட்டார் என்று தெரிந்தபோது அவருடைய உருவத்திலேயே ஒரு சோர்வு தெரிந்தது – கமல்ஹாசன்
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி பிழைக்க மாட்டார் என்று தெரிந்தபோது அவருடைய உருவத்திலேயே ஒரு சோர்வு தெரிந்தது. அப்படி அவர் இருக்கவே மாட்டார் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் எஸ்.பி.பி. நினைவஞ்சலிக் கூட்டம் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில் காணொலிமேலும் படிக்க...
35 டன் எடையிலான கஞ்சா கடத்தல்: பலநாட்டு அதிகாரிகளின் உதவியுடன் மடக்கிபிடித்த ஸ்பெயின் அதிகாரிகள்
ஸ்பெயினில் கடத்தப்பட்ட 35 டன் எடையிலான கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக, ஸ்பெயினின் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 24-28ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் ஒன்பது பல்கேரியர்களையும் ஒரு ரஷ்யரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், 5மேலும் படிக்க...
முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம்
சிறுவர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கறுப்புக் கொடி ஏந்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். சிறுவர் தினமான இன்று (வியாழக்கிழமை) காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அண்மையில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினரின் இணைப்பு அலுவலகத்திற்கு முன்பாகமேலும் படிக்க...
கிளிநொச்சியிலும் வலிந்து காணாமல் ஆக்கப் பட்டவர்களின் உறவுகள் போராட்டம்
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலை அருகாமையில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்திற்கான அலுவலகம் முன்பாக ஏ9 வீதியில்மேலும் படிக்க...
விஷம் வைக்கப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் புடின்: அலெக்ஸி நவல்னி சந்தேகம்!
தனக்கு விஷம் வைக்கப்பட்ட விவகாரத்தின் பின்னணியில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் இருந்தாக கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னி சந்தேகிக்கின்றார். இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படவிருந்த ஜேர்மனி பத்திரிக்கையொன்றுக்கு அளித்த நேர்காணலின் போதே இதனை அவர் கூறியுள்ளார். ‘இந்த குற்றத்தின் பின்னணியில் புடின்மேலும் படிக்க...
சிறுவர்கள் முறையாக வழி நடத்தப்படுவதை உறுதிசெய்வது எமது பொறுப்பு – பிரதமர் மஹிந்த
ஒவ்வொரு நாட்டினதும் எதிர்காலம் சிறுவர்களே என்றும் அவர்களை ஆரோக்கியமான செயற்திறன் மிக்கவர்களாக மாற்றுவதற்கும் அவர்கள் முறையாக வழிநடத்தப்படுகின்றார்களா என்பதை உறுதிசெய்வதும் எமது பொறுப்பு என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயேமேலும் படிக்க...
இயற்கை வளங்களை பாதுகாக்கவும் நிர்வகிக்கவும் இலங்கை உறுதி பூண்டுள்ளது – ஐ.நா.வில் ஜனாதிபதி
இயற்கை வளங்களை பாதுகாக்கவும், அதனை முறையாக நிர்வகிக்கவும் இலங்கை அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் நிலையான அபிவிருத்திக்கான பல்லுயிர் தொடர்பான அவசர நடவடிக்கை என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற உச்சி மாநாட்டில் கருத்துமேலும் படிக்க...