Day: April 18, 2020
தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று: மொத்தம் 1372 ஆக உயர்வு!
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1372 ஆக அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த முதலாம் திகதி முதல் கொரோனாவால் பலர்மேலும் படிக்க...
சீனாவின் தவறினை நியாயப் படுத்துகின்றதா உலக சுகாதார அமைப்பு!
சீனாவை போன்று ஏனைய நாடுகளும் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கையை திருத்திக் கூற வாய்ப்புள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 869 ஆக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ஆயிரத்து 290மேலும் படிக்க...
தாய்வான் கடற்படை வீரர்கள் 700 பேர் தனிமைப் படுத்தப்பட்டனர்
தாய்வான் கடற்படை வீரர்கள் 700 பேரை தனிமைப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. கடற்படையில் பணியாற்றிய சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையினைத் தொடர்ந்து குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பசுபிக் பிராந்தியத்தின் பாலவ் தீவு மக்களுக்கான நல்லெண்ண வேலைத் திட்டத்தில் ஈடுபட்ட கடற்படைமேலும் படிக்க...
இந்தியாவில் 500ஐ நெருங்கும் உயிரிழப்பு: 15 ஆயிரம் வரை பாதிப்பு!
இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் கடந்த 24 மணிநேரத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்தமாக மரணப்பதிவுகள் 500ஐ நெருங்குகிறது. இதுவரை, உயிரிழப்பு 480ஆக அதிகரித்துள்ளதுடன் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 14ஆயிரத்து 378 ஆக உயர்ந்துள்ளது. இதில் 11 ஆயிரத்து 906மேலும் படிக்க...
ஆதரவைப் பயன்படுத்தி அரசாங்கம் அரசியல் இலாபம் பெறுவதற்கு இடமளிக்க முடியாது- மனோ
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்க் கட்சிகளால் வழங்கப்படும் ஆதரவைப் பயன்படுத்தி அரசாங்கம் அரசியல் இலாபம் அடைவதற்கு இடமளிக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களை நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர்மேலும் படிக்க...
20 ஆம் திகதி முதல் 18 மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு தளர்வு!
கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு நீக்கப்படவுள்ளது. கொழும்பு, கம்பஹா, புத்தளம், களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி முதல்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் பரவலால் மகாராணியின் பிறந்தநாள் கொண்டாட்டம் தடை
பிரித்தானியாவின் முடிக்குரிய மகாராணி தனது பிறந்தநாளுக்கு வழங்கப்படும் துப்பாக்கி வேட்டு மரியாதையினை இவ்வருடம் நிகழ்த்த வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் 21ஆம் திகதி பிரித்தானியாவின் முடிக்குரிய மகாராணியின் 94ஆவது பிறந்த தினம் கொண்டாடப்படவுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு வருடமும் மகாராணி எலிசபெத்தின்மேலும் படிக்க...
ஆயிரம் ரூபாவைவிட மக்களின் உயிர்தான் எமக்கு முக்கியம்
ஆயிரம் ரூபாவைவிட மக்களின் உயிர்தான் எமக்கு முக்கியம். எனவே, சம்பள உயர்வு விடயத்தில் எந்தவொரு நொண்டி சாட்டையும் நாம் கூறவில்லை. மக்களுக்கு நிச்சயம் ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்போம்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.மேலும் படிக்க...