தென் கொரியாவில் இருந்து வருகை தந்த இருவர் வைத்திய சாலையில் அனுமதி
இன்று (01) அதிகாலை 137 இலங்கையர்கள் தென் கொரியாவில் இருந்து நாடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறு வருகை தந்த இருவரின் உடல் உஷ்ணம் அதிகமாக இருப்பதால் சிகிச்சைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில நாட்களாக தென் கொரியாவில் இருந்து பலர் மீண்டும் நாடு திரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு வருபவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விஷேட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.