Main Menu

இன்று முதல் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று (01) முதல் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது.

´சுபிட்சத்தின் நோக்கு´ என்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தை வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருந்தார்.

குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியால் சமர்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கும் கடந்த 14 ஆம் திகதி அனுமதி கிடைத்தாக அரசாங்கம் அறிவித்தது.

தேயிலை தொழிற்த்துறையை தரமிக்கதாக்கி அதனூடாக உற்பத்தியை மேம்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதற்கமைய தற்போது புதிய வரி சலுகை வழங்கப்பட்டுள்ளமை, உரத்திற்கான சலுகை விலை அறிவிக்கப்பட்டுள்ளமை அத்துடன் தோட்ட கம்பனிகளுக்கு கிடைக்கும் நன்மைகளை தொழிலாளர்களும் பெற வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவாகியிருந்தால் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1500 ரூபா அடிப்படைச் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டிருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

பகிரவும்...