Main Menu

2 வயதில் 12 நிறங்களின் பெயர்களைக் கூறி சாதனை புரிந்த அதிசய குழந்தை – சாதனை சான்றிதழ் பதக்கம்

இரண்டு வயதில் 12 நிறங்களின் பெயர்களைக்‍ கூறி, உலக சாதனை செய்த திருப்பூரைச் சேர்ந்த குழந்தையை கெளரவிக்‍கும் வகையில், நோபல் உலக சாதனை அமைப்பினர், சாதனை சான்றிதழ் பதக்கம் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

நெருப்பெரிச்சல் பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன், கிருத்திகா தம்பதியினரின் 2 வயது பெண் குழந்தை சிவன்யா. பல்வேறு நிறங்களை காண்பித்து, அவற்றின் பெயர் என்னவென்று கேட்டால், மழலை மொழியில் மிகச்சரியாக வண்ணங்களின் பெயர்களைக்‍ கூறி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்.

தனது அதீத ஞபக சக்தியுடன் விளங்கும் அக்‍குழந்தைக்‍கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். மழலைப் பள்ளிக்கு செல்லும் முன்னே 12 நிறங்களில் பெயர்களைக் கூறி, குழந்தை சிவன்யா, உலக சாதனை நிகழ்த்தியது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. சிவன்யாவின் உலக சாதனையைப் பாராட்டி, நோபுள் உலக சாதனை புத்தகம் நிறுவனம் சார்பில், பாராட்டுக்களை தெரிவித்து சான்றிதழ் மற்றும் கேடயத்தை வழங்கியது. வழங்கப்பட்டன.

பகிரவும்...