Main Menu

2ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர்.கைலாசபிள்ளை ஜெயக்குமார் (16/01/2022)

தாயகத்தில் அரியாலையை சேர்ந்த பிரான்ஸை வதிவிடமாகக் கொண்ட கைலாசபிள்ளை ஜெயக்குமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலியை 16ம் திகதி ஜனவரி மாதம் ஞாயிற்றுக்கிழமை
இன்று இல்லத்தில் நினைவு கூருகின்றார்கள்.

அமரர் திரு கைலாசபிள்ளை ஜெயக்குமார் அவர்களை அன்பு மனைவி காந்திமலர்( மலர்) பிள்ளைகள் புஷ்பராணி (பேபி) தெய்வலதா (பவா) பிரேமலதா (குட்டி) மருமக்கள் சிவகுமார் (சிவா) சுப்பிரமணி, லோகராசா (ரவி) பேரப்பிள்ளைகள் அஸ்வின், அலக்சன், சாகிசன், சாபிசா, சாதுசா, சசிகரன் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்னாரை இன்றைய தினம் நினைவு கூருகின்றனர்.

இன்று 2ம் ஆண்டில் நினைவு கூரப்படும் கைலாசபிள்ளை ஜெயக்குமார் அவர்களை TRTதமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் நினைவு கூருகின்றனர்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு மகள் பேபி சிவா குடும்பத்தினர்

அவர்களுக்கும் எமது நன்றிகள்

ஆண்டுகள் இரண்டு ஓடி மறைந்தாலும்,

அப்பாவின் அன்பான நினைவுகள் மறைவதில்லை.

மடியில் அமர்த்தி மகிழ்வாய் சோறு ஊட்டியதை மறக்க முடியுமா..!

கரம்கோர்த்து கல்லூரிக்கு
அழைத்து செல்வதை சொல்லவா..!

நல்லாசிரியராய் இருந்து
நன்மைதீமை சொல்லியதை
மறக்க முடியுமா..!

நல்ல நண்பனாய் இருந்து
நன்மைகள் பல புரிந்ததை சொல்வவா..!

கண்ணுக்கு அழகான கணவனை கரம்பற்ற வைத்ததை சொல்லவா..!

அப்பா உங்களைப்பற்றி ஆயிரம் சொல்லலாம்..!

இப்படி பல செய்து எங்கள் மனதில் இடம்பிடித்த எங்கள் அப்பா..,

எங்கு சென்றீர்கள் எங்களை விட்டு..!

இனி எப்பிறவியில் காண்போம் உங்களை..!

இன்னொரு பிறவி இருந்தால்
எங்கள் தந்தையாக பிறக்க வேண்டும் அப்பா.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.
நன்றியுடன் அன்பும்
பேபி சிவா.

பகிரவும்...