Main Menu

கொரோனாத் தொற்று – 14.380 வகுப்புகள் மூடல்

2022 ஆம் ஆண்டில் பாடசாலைகள் ஆரம்பித்த இரண்டு வாரங்களிற்குள், பெருமளவான மாணவர்கள் கொரோனத் தொற்றிற்கு உள்ளாகி உள்ளனர்.

331.715 மாணவர்களிற்குத் தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த வாரத்தில் இது 75.000 ஆக இருந்துள்ளது.

பல மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். அத்துடன் 14.380 வகுப்புகள் கொரோனத் தொற்றினால் மூடப்பட்டுள்ளன.

கொரோனத் தொற்றுக்காலத்திலும் பாடசாலைகளைத் திறப்போம் என அடம்பிடித்துத் திறந்த தேசியக் கல்வியமைச்சே மேற்கண்ட தரவினை வழங்கி உள்ளது.

இல்-து-பிரான்சிலேயே பெருமளவான வகுப்புகள் மூடப்பட்டுள்ளன.

கிரித்தெய் கல்வித்திணைக்களத்தில் 2.599 வகுப்புகளும், வேர்செய் கல்வித்திணைக் களத்தில் 2.116 வகுப்புகளும் மூடப்பட்டுள்ளன.
கிரனோபிளில் 803 வகுப்புகள் மூடப்பட்டுள்ளன.

இன்றைக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் பிரான்சில், 9.202 வகுப்புகள் மட்டுமே மூடியிருந்த நிலையில், தற்போது 14.380 வகுப்புகள் மூடப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சிக்கு உரியது.

பகிரவும்...