Main Menu

19 ஆவது திருத்தத்தினால் கீரியும் பாம்பும் போல மைத்திரி -ரணில் முரண்பட்டமையே தாக்குதலுக்கு காரணம்: ஜி.எல்.பீரிஸ்

நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் கீரியும் பாம்பும் போல முரண்பட்டுக் கொண்டதாலேயே ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலை தடுக்க முடியாமல்போனது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த அவர், அரசியமைப்பின் 19 ஆவது திருத்தத்தினால் முத்துறையினருக்கிடையில் ஏற்பட்ட அதிகார முரண்பாடே இதற்கு பிரதான காரணம் என கூறினார்.

தற்போது 20 ஆவது திருத்தம் தொடர்பாக எதிர்த்தரப்பினர் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மாறுப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் அவர்கள் கொண்டுவந்த 19 ஆவது திருத்தத்தினால் நாட்டுக்கு பாரதூரமான விளைவுகளே ஏற்பட்டன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடைல் ஏற்பட்ட முரண்பாடு ஈஸ்டர் தாக்குதல்களுக்கும் பொருளாதார வீழ்ச்சிக்கும் பிரதான காரணியாக இருந்தது என அவர் குறிப்பிட்டார்.

எனவே இவ்வாறான நிலை மீண்டும் தோற்றம் பெற கூடாது என்பதற்காகவே 20 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி தற்துணிவுடன் செயற்பட வேண்டும் என்பதற்காகவே  20 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...