Main Menu

17 வெளிநாட்டு தூதுவர்களை நாடு திரும்புமாறு ஆர்ஜென்ரினா உத்தரவு

ஆர்ஜென்ரினாவின் 17 வெளிநாட்டு தூதுவர்களை நாடு திரும்புமாறு அந்நாட்டின் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டின் புதிய ஜனாதிபதியாக ஆல்பர்டோ பெர்னாண்டோஸ் அடுத்த மாதம் 10ஆம் திகதி பதவி ஏற்க உள்ள நிலையில் தற்போதைய ஜனாதிபதி மொரிசியோ மேக்ரி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து பொலிவியா, கொலம்பியா, சிலி, ஈக்குவடார், மெக்சிகோ, பெரு, பராகுவே, உருகுவே, கோஸ்டாரிகா, ஸ்பெயின், போர்த்துக்கல், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு புதிய தூதுவர்கள் நியமிக்கப்படவுள்ளார்கள்.

ஆர்ஜென்டரினாவில் கடந்த மாதம் 27ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மொரிசியோ மெக்ரியும் ஜஸ்ரியலிஸ்ற் கட்சி வேட்பாளர் ஆல்பர்டோ பெர்னாண்டோசும் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் அல்பர்டோ பெர்னாண்டோஸ் வெற்றி பெற்றார். ஆர்ஜென்ரினாவில் பதவியில் உள்ள ஜனாதிபதி ஒருவர் தோல்வி அடைந்திருப்பது இதுவே முதன்முறையாகும்.

இந்நிலையில் பதவிக்காலம் முடிய உள்ள தற்போதைய அதிபர் மொரிசியோ மெக்ரி, 17 வெளிநாடுகளில் தூதர்களாக அரசியல் சார்புள்ளவர்களை நியமித்திருந்தார். அவர்கள் தூதரக ரீதியில் தகுதி பெறாதவர்கள்.

புதிய ஜனாதிபதி பதவி ஏற்க உள்ள நிலையில், இந்த 17 தூதுவர்களையும் நாடு திரும்பி விடுமாறு மெக்ரி உத்தரவிட்டுள்ளார்.

பகிரவும்...