Main Menu

13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய சிறிய தந்தை மானிப்பாய் பொலிஸாரால் கைது!

13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சிறிய தந்தை மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரின் மனைவியான சிறுமியின் சிறிய தாய் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டைப் பகுதியில் இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் சிறிய தாயார், தனது கணவருக்கு எதிராக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் நேற்று (திங்கட்கிழமை) முறைப்பாடு செய்துள்ளார்.

சிறுமியின் தாயார் முல்லைத்தீவில் வசிக்கிறார். மகளின் கல்விக்காக ஆனைக்கோட்டையில் வசிக்கும் தனது இளைய சகோதரியின் பாதுகாப்பில் மகளை விட்டுள்ளார்.

இந்நிலையில், சிறிய தந்தையால் சிறுமி நேற்று வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என பொலிஸில் வழங்கப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டடுள்ளது.

இந்நிலையில், சிறுமியை சட்ட மருத்துவ அதிகாரியின் முன்னிலையில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் சந்தேகநபர் இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

பகிரவும்...