Main Menu

ஹொங்கொங் ஜனநாயக சார்பு ஊடக அதிபர் ஜிம்மி லாய்க்கு 12 மாத சிறைத்தண்டனை!

ஹொங்கொங்கின் ஊடக ஜாம்பவான் ஜிம்மி லாய்க்கு, 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டில் பெரிய ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகக் கருதப்பட்ட பல ஆர்வலர்களில் ஒருவரான ஜிம்மி லாய்க்கு, இன்று (வெள்ளிக்கிழமை) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஆப்பிள் டெய்லி பத்திரிக்கையின் நிறுவனரான 73 வயதான ஜிம்மி லாய், பெய்ஜிங்கை கடுமையாக விமர்சிப்பவர் ஆவார்.

முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு ஒகஸ்ட் 18ஆம் திகதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதற்காக ஒன்பது ஆர்வலர்களுக்கு வெள்ளிக்கிழமை தண்டனை வழங்கப்பட்டது.

அத்துடன் ஒகஸ்ட் 31ஆம் திகதி ஒரு தனி எதிர்ப்பு தொடர்பாக மேலும் மூன்று பேருக்கு தண்டனை கிடைத்தது.

பகிரவும்...