Main Menu

ஹங்கேரியில் மனைவியை முதுகில் சுமந்தபடி கணவன் ஓடும் போட்டி!

ஹங்கேரி நாட்டில் மனைவியை முதுகில் சுமந்த படி கணவன் சேற்றில் ஓடும் பந்தயம் நடைபெற்றது.

Tapiobicske கிராமத்தில் நடைபெற்ற இந்த பந்தயத்தில் 12க்கும் மேற்பட்ட ஜோடிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டன.

சுமார் 260 மீட்டர் தூரம் உள்ள மலைப்பாங்கான பகுதிகள் மற்றும் சேற்றுப் பகுதிகள் ஆகியவற்றை கடக்க வேண்டும் என்பது பந்தயத்தின் விதியாகும்.

இரண்டு பிரிவாக நடந்த இந்த பந்தயத்தில் வெற்றி பெறும் முதல் 4 ஜோடிகள் இறுதி போட்டியில் கலந்து கொண்டன.

தொடர்ந்து பந்தயத்தில் வெற்றி பெற்ற ஜோடி உலக சாம்பியன் போட்டியில் நுழைய விரும்புவதாக தெரிவித்தன. பின்லாந்தில் தான் முதன்முதலாக 1990ஆம் ஆண்டில் இந்த பந்தயம் ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...