Main Menu

ஸ்பெயினில் ஒரேநாளில் ஆறாயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

ஐரோப்பாவை பொறுத்தவரை மிகப்பெரிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஸ்பெயினில், ஒரேநாளில் ஆறாயிரம் பேருக்கு வைரஸ் தொற்று பரவியுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி ஸ்பெயினில் 6,740பேர் புதிததாக கொரோனா வைரஸ் தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றாளராக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 219,764ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் நேற்று மட்டும் 367பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22,524ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 104,885பேர் சிகிச்சை பெற்றுவருதோடு, 7,705பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 92,355பேர் பூரண குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.

பகிரவும்...