Main Menu

ஸ்ட்ராஸ்பேர்க் நகரில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ – ஒருவர் உயிரிழப்பு!

பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பேர்க் நகரில் அடுக்குமாடி கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 5 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உயர் கட்டிடமொன்றில் 8 ஆவது மாடியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது என்றும் அத்தோடு குறித்த பகுதிக்கு விரைந்த தீயனைப்பு படையினர் தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இதனை அடுத்து விபத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தீயிணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

அத்தோடு அக்கட்டிடத்தில் இருந்த 83 பேரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள பாடசாலையில் தங்க வைக்கப்ட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்து.

பகிரவும்...