Main Menu

தேவாலயத்துக்குள் கத்திக்குத்து தாக்குதல்! – பாதிரியார் உட்பட இருவர் காயம்!

சற்று முன்னர், நீஸ் (Nice) நகரில் உள்ள தேவாலயம் ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இங்குள்ள Saint-Pierre d’Arène தேவாலயத்தில் காலை 10 மணி அளவில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஆயுததாரி ஒருவர் குறித்த தேவாலயத்துக்குள் நுழைந்து அங்கிருந்த பாதிரியார் ஒருவரையும்- அருட்சகோதரி ஒருவரையும் கத்தியால் குத்தியுள்ளான். இத்தாக்குதலில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களது உயிருக்கு ஆபத்தில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். ஆயுததாரி உடனடியாக அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்தார்.

விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

பகிரவும்...