Main Menu

வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் – ஜேர்மன் சுகாதார அமைச்சர்

அனைத்து முதலாளிகளும் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என ஜேர்மன் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டபோது இருந்ததை விட அதிகளவிலானவர்கள் தற்போது வெளியில் நடமாடுவதாகவும் கூறினார்.

இதேவேளை கொரோனா தொற்று உறுதியானவர்களில் மேலும் 1,000 க்கும் மேற்பட்ட மரணங்கள் ஒரு நாளில் பதிவாகியுள்ள நிலையில் அவர் இந்த வேண்டுகோளினை விடுத்துள்ளார்.

மேலும் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் சமூக தொடர்புகள் குறைக்கப்பட வேண்டும் என்றும் ஜேர்மன் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...