Main Menu

விவசாயிகளின் போராட்டம் : இன்று முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு!

வேளாண் திருத்த சட்டமூலங்களை எதிர்த்து விவசாயிகள் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இன்னும் சில நாட்களில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ள நிலையில் விவசாயிகள் தங்களுக்கு வாய்ப்பான திகதியில் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த சூழலிலேயே விவசாயிகள் மேற்படி அறிவித்துள்ளனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் புராரி மைதானத்திலும் டெல்லியின் எல்லைப்பகுதிகளிலும் விவசாயிகளின் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி வேளாண் சட்டங்களை இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் முன்வைத்துள்ளனர். இது குறித்து மத்திய அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...