Main Menu

விவசாயிகளின் பிரச்சினை : கனடா பிரதமருக்கு இந்தியா கண்டனம்!

வேளாண் சட்டமூலங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று (புதன்கிழமை) ஏழாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், இது குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தெரிவித்துள்ள கருத்திற்கு இந்தியா கண்டனம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா “ இந்தியாவில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் தொடர்பாக முழுமையான தகவல்களைத் தெரிந்து கொள்ளாமல் கனடாவைச் சேர்ந்த தலைவர்கள் கருத்து தெரிவிப்பதைக் காண்கிறோம்.

ஒரு ஜனநாயக நாட்டின் உள்விவகாரங்கள் குறித்த இதுபோன்ற கருத்துகள் தேவையற்றவை. இராஜாங்க ரீதியான பேச்சுகள் அரசியல் காரணங்களுக்காக தவறாக சித்திரிக்கப்படாமல் இருப்பது சிறந்தது”  எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவசாயிகளின் போராட்டம் குறித்து ஜஸ்டின் ட்ரூடோ தெரிவிக்கையில், “ விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் குறித்து இந்தியாவிலிருந்து வெளிவரும் செய்திகளை அங்கீகரிக்காவிட்டால் நான் பொறுப்பற்றவனாகிவிடுவேன்.

அங்கு நிலவும் நிலைமை கவலைக்குரியது. விவசாயிகளின் குடும்பத்தினர்,  நண்பர்கள் பற்றி நாம் அனைவரும் கவலைப்படுகிறோம்.  அமைதியான போராட்டத்தின் உரிமையைப் பாதுகாக்க கனடா எப்போதும் துணை நிற்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...