Main Menu

வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக திருகோணமலை மீனவர்கள் கவலை

காலநிலை மாற்றம் காரணமாக திருகோணமலை மாவட்ட மீனவர்கள் தமது தொழிலை மேற்கொள்ள முடியாது பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக பெய்துவரும் கன மழை காரணமாக தாம் கடலுக்கு செல்ல முடியாதிருப்பதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும், கொரோனா பேரிடர் காரணமாக தொழிலை மேற்கொள்ள முடியாமலிருந்த காலப்பகுதியில் தாம் மிகவும் அல்லலுற்றதாக தெரிவித்த மீனவர்கள், தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக தாம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

அத்துடன் மீன்பிடிக்க செல்வதற்கு தம் உயிரை பணயம் வைத்து கடலுக்கு செல்லவேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாகவும் தற்போது பிடித்துவரும் மீன்களை சந்தைப்படுத்தவும் போதிய விலை கிடைக்காதமையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

பகிரவும்...