வவுனியாவில் சில பிரதேசங்களில் நில அதிர்வு
வவுனியா, தாண்டிக்குளம் மற்றும் பத்தினியார்மகின்லன்குளம் ஆகிய பிரதேசங்களில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை 09.52 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
சில வினாடிகள் இந்த நடுக்கம் நிலவியுள்ளதாகவும், சில வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளிலும் அதிர்வு ஏற்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றன.
எனினும் சம்பவத்தால் எந்த நபருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.