Main Menu

வளர்ப்பு நாயை குளிப்பாட்டிக் கொண்டிருந்தவர் கைது!

வளர்ப்பு நாயை குளிப்பாட்டிக்கொண்டிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  செவ்வாய்க்கிழமை மாலை இச்சம்பவம் Sevran (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது. மகிழுந்துக்கள் கழுவும் நிலையம் ஒன்றில், தனது வளர்ப்பு நாய் ஒன்றை ஒருவர் குளிப்பாட்டிக்கொண்டிருந்துள்ளார். மகிழுந்துகள் கழுவ பயன்படுத்தும் இயந்திரமான karcher இனை பயன்படுத்தி அவர் வளர்ப்பு நாயை குளிப்பாட்டியுள்ளார்.  

 karcher இயந்திரத்தில் இருந்து மிக வேகமாக தண்ணீர் பீய்ச்சி வளர்ப்பு நாய் மீது அடித்துள்ளது. இதனால் நாய் மிகவும் வேதனையில் துடித்துள்ளது.  இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், விலங்குகள் பாதுகாப்பு அமைப்பினருக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் காவல்துறையினரை அழைத்துக்கொண்ட்டு சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்தனர்.  வளர்ப்பு நாயை குளிப்பாட்டியவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரின் 8 வயதுடைய femelle croisée berger  இன வளர்ப்பு நாயை அவரிடம் இருந்து மீட்டு, விலங்குகள் பாதுகாப்பு அமைப்பினர் அழைத்துச் சென்றனர். 

பகிரவும்...