வரலாற்று வெற்றிகளை குவித்த அ.தி.மு.கவின் ஆட்சியை முதலமைச்சர் தக்க வைத்துக் கொண்டார் – புகழேந்தி
வரலாற்று வெற்றிகளை குவித்த அ.தி.மு.கவின் ஆட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தக்கவைத்துக்கொண்டுள்ளார் என அ.ம.மு.க உறுப்பினர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இதனையே சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா விரும்புவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சேலத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், தான் தற்போது வரையில் அ.ம.மு.கவில் தான் இருப்பதாகவும், குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பில் அரசியல் குறித்த தான் பேசவில்லை எனத் தெரிவித்த அவர், தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக்களையே தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.