Main Menu

வடகிழக்கு சிரியாவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல்: 57பேர் உயிரிழப்பு!

வடகிழக்கு சிரியாவில் ஈரானிய ஆதரவுடைய போராளிகளின் நிலைகளை இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்கியதில் 57பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈரானிய ஆதரவுடைய போராளிகள் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படைப் போராளிகள் அதிக அளவில் இருப்பதைக் கொண்ட டெய்ர் எஸோர் மாகாணத்தில் நேற்று (புதன்கிழமை) இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இவர்களில் 14 ஆட்சி துருப்புக்கள், 16 ஈராக் போராளிகள் மற்றும் ஈரான் சார்பு பாத்திமிட் படைப்பிரிவின் 11 ஆப்கானிய உறுப்பினர்கள் அடங்குவர்.

‘இது சிரியாவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் ஏற்பட்ட மிகப்பெரிய இறப்பு எண்ணிக்கை’ என்று சிரிய மனித உரிமைகளுக்கான ஆய்வகத்தின் ராமி அப்துல் ரஹ்மான் கூறினார்.

மேலும், வொஷிங்டனில் உள்ள ஒரு மூத்த புலனாய்வு அதிகாரி, அமெரிக்கா வழங்கிய உளவுத்துறையுடன் இந்த வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், ஈரானிய ஆயுதங்களை சேமிக்கப் பயன்படும் சிரியாவில் கிடங்குகளைத் தாக்கியதாகவும் கூறினார்.

பகிரவும்...