Main Menu

லண்டன் தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பேற்றது ஐ.எஸ்!

லண்டன் பாலம் மீது உஸ்மான் கான் என்ற பயங்கரவாதியினால் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

குறித்த தகவலை அதன் உத்தியோகப்பூர்வ செய்தி முகமை மூலமாக வெளியிட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலானது தங்கள் அமைப்பினைச் சேர்ந்த ஒருவரே முன்னெடுத்ததாக அந்த தகவலில் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச அளவில் ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர்களை பிரித்தானியா உள்ளிட்ட நேச நாடுகள் குறிவைப்பதற்கு பதிலடி தரும் வகையிலேயே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக அந்த செய்தி குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பகிரவும்...