Main Menu

ரஷ்ய ராணுவத் தளத்தில் துப்பாக்கிச் சூடு 8 பேர் உயிரிழப்பு

ரஷ்ய ராணுவத் தளத்தில் ராணுவ வீரர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர் ஒருவர் தனது சக வீரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள்காட்டி இன்ரபக்ஸ் (Interfax news) நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்ததாகவும் எனினும் அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மொங்கோலிய எல்லைக்கு வடக்கே சுமார் 93 மைல் தொலைவில் உள்ள பைக்கால் (Baikal) ஏரியின் கிழக்கு நகரமான கோர்னியில் (Gorny) உள்ள ஒரு ராணுவத் தளத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்ட அந்த ராணுவ வீரர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பகிரவும்...