ரஷ்யாவில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு – மூவர் உயிரிழப்பு!
ரஷ்யாவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் மத்திய பகுதியிலுள்ள ரஷ்ய FSB பாதுகாப்பு பிரிவின் தலைமையகத்திலேயே மர்ம நபர் ஒருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஆயுததாரி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் இதுகுறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.