Main Menu

ரக்பி உலகக்கிண்ண தொடர்: இத்தாலி அயர்லாந்து இங்கிலாந்து அணிகள் வெற்றி!

இரசிகர்களை உச்ச விறுவிறுப்பில் ஆழ்த்திவரும் ரக்பி உலகக்கிண்ண தொடர், தற்போது ஜப்பானில் நடைபெற்று வருகின்றது.

9ஆவது அத்தியாயமாக நடைபெற்று வரும் இத்தொடரில், தற்போது முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் நேற்று மூன்று லீக் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளின் முடிவுகளை தற்போது பார்க்கலாம்…

ஹனாசோனோ  விளையாட்டரங்கில் குழு பி பிரிவில் நடைபெற்ற போட்டியில், இத்தாலி அணியும், நமிபியா அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை பரிசளித்த இப்போட்டியில், 47-22 என்ற புள்ளிகளின் அடிப்படையில், இத்தாலி அணி வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இத்தாலி அணி ஐந்து புள்ளிகளை பெற்றதோடு, குழு பி பிரிவில் முதலிடத்தையும் பெற்றுக்கொண்டது.

………….

யோகோஹாமா விளையாட்டரங்கில் நடைபெற்ற குழு ஏ பிரிவில் நடைபெற்ற போட்டியில், அயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் மோதிக் கொண்டன.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 27-3 என்ற புள்ளிகளின் அடிப்படையில், அயர்லாந்து அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்த வெற்றியின் மூலம் அயர்லாந்து அணி ஐந்து புள்ளிகளை பெற்றதோடு, குழு ஏ பிரிவில் முதலிடத்தையும் பெற்றுக்கொண்டது.

…………

சப்போரோ டோம்  விளையாட்டரங்கில் நடைபெற்ற குழு சி பிரிவில் நடைபெற்ற போட்டியில், இங்கிலாந்து அணி, டோங்கோ அணியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், இங்கிலாந்து அணி, 35-3 என்ற புள்ளிகளின் அடிப்படையில் அபார வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி ஐந்து புள்ளிகளை பெற்றதோடு, குழு சி பிரிவில் முதலிடத்தையும் பெற்றுக்கொண்டது.

பகிரவும்...