Main Menu

யார் கூட்டணி அமைத்தாலும் தேர்ந்தெடுப்பது பொதுமக்கள் கையிலேயே உள்ளது- நாமல்

யார் கூட்டணி அமைத்தாலும் இறுதியில் அவர்களை தேர்ந்தெடுப்பது பொதுமக்களே என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகமொன்றின் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பலம் வாய்ந்த அரசாங்கம் ஒன்று தேவை என்பது இந்நாட்டு அறிவார்ந்த மக்கள் அறிந்த விடயம்.

அத்துடன் பொதுமக்கள் தமது வாக்கினை பாவிக்கும்போது தமது கடமைகள் மற்றும் பொறுப்புக்களை உணர்ந்து செயற்படுவார்கள் என நம்புகிறேன்.

இதேவேளை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தொண்டர்கள் மற்றும் மக்கள் ஆணைக்கு ஒருபோதும் அசாதாரணம் ஏற்படாது” என குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...