Main Menu

மோடிக்கு கிடைக்கப்பெற்ற அன்பளிப்பு பொருட்கள் ஏலத்தில் விற்பனை!

பிரதமர் மோடிக்கு கடந்த 6 மாதங்களில் அன்பளிப்பாக கிடைக்கப்பெற்ற 2772 பொருட்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

குறித்த அன்பளிப்பு பொருட்கள் டெல்லியில் உள்ள தேசிய நவீன கலைப்பொருட்கள் விற்பனையகத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுகின்றன.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பிரகலாத் படேல், “கடந்த 6 மாதங்களில் பிரதமருக்கு அன்பளிப்பாக கிடைத்த பொருட்கள் ஏலத்தில் விடப்படுகின்றன.

இந்த ஏலம் அக்டோபர் மாதம் 3ஆம் திகதி வரை நடைபெறும். இந்த பொருட்களின் அடிப்படை விலையை பொறுத்தவரையில் குறைந்தபட்ச தொகையாக 200 ரூபாயில் இருந்து 2.5 இலட்சம் ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி செல்லும் இடங்களில் அவருக்கு பல்வேறு தரப்பினரும் அன்பளிப்பாக பல பொருட்களை வழங்கிவருகின்றனர்.

இந்த பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தை கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு வழங்க பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, கடந்த ஜனவரி மாதத்தில் 1800 பொருட்கள் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து அடுத்தகட்டமாக பிரதமருக்கு அன்பளிப்பாக கிடைக்கப்பெற்ற 2772 பொருட்கள் இன்று முதல் ஏலத்தில் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...