Main Menu

மே தினத்தை முன்னிட்டு ‘ப்றொடெக்ட்’ சங்கத்தின் கவனயீர்ப்பு போராட்டம்

மே தினத்தை முன்னிட்டு முறைசாரா துறையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஹட்டனில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

ஹட்டன் மல்லியப்பு சந்தியில் ‘ப்றொடெக்ட்’ சங்கத்தின் உப தலைவி கருப்பையா மைதிலி தலைமையில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் 100ற்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.

வீட்டுத் தொழிலாளர்களும் தொழிலாளர்களே, அவர்களின் தொழில்சார் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என பல கோரிக்கைகள் இதன்போது விடுக்கப்பட்டது,

மேலும் புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

பகிரவும்...