Main Menu

மூன்று மாதங்களுக்கு பின்னர் ஆரம்பமான ஸ்ரீலங்கன் விமான சேவை

மூன்று மாதங்களுக்கு பின்னர் பாகிஸ்தானின் கராச்சி நகரிற்கு இலங்கையில் இருந்து முதலாது விமானம் இன்று பிற்பகல் 12.20 மணியளவில் புறப்பட்டு சென்றுள்ளது.

இதன்படி அந்த விமானம் மாலை 3.10 மணியளவில் கராச்சி நகரை சென்றடையவுள்ளதுடன் பின்னர் அந்த விமானம் 4.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு மீண்டும் புறப்படவுள்ளது.

இந்த விமான பயணத்திற்காக ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான ஏ-320 ஏயர் பஸ் ரக விமானம் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 166 பயணிகளும் 8 பணிக்குழாமினரும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பகிரவும்...