Main Menu

மூத்த இராணுவத் தளபதியின் இறுதிச் சடங்கில் கார் குண்டு தாக்குதல் – இருவர் உயிரிழப்பு

கிழக்கு லிபிய நகரமான பெங்காசியில் மேற்கொள்ளப்பட்ட கார் குண்டு தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

பெங்காசியின் ஹுவாரி கல்லறையில் முன்னாள் மூத்த இராணுவத் தளபதியின் இறுதிச் சடங்கு இடம்பெற்றுக் கொண்டிருந்தபோதே இந்த குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

2011 ஆம் ஆண்டு கவிழ்க்கப்பட்ட லிபியாவை 42 ஆண்டுகள் ஆண்ட சர்வாதிகாரி கடாபியின் கீழ் லிபியாவின் சிறப்புப் படைகளின் உதவித் தளபதியாக அவர் செயற்பட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

பகிரவும்...