Main Menu

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர்.திரு.கைலாசபிள்ளை ஜெயக்குமார்

தாயகத்தில் அரியாலையை சேர்ந்த பிரான்ஸை வதிவிடமாகக் கொண்ட கைலாசபிள்ளை ஜெயக்குமார் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவஞ்சலியை இன்று 28ம் திகதி டிசம்பர் மாதம் திங்கட்கிழமை இல்லத்தில் நினைவு கூருகின்றார்கள்.

அமரர் திரு கைலாசபிள்ளை ஜெயக்குமார் அவர்களை அன்பு மனைவி காந்திமலர்( மலர்) பிள்ளைகள் புஷ்பராணி (பேபி) தெய்வலதா (பவா) பிரேமலதா (குட்டி) மருமக்கள் சிவகுமார் (சிவா) சுப்பிரமணி, லோகராசா (ரவி) பேரப்பிள்ளைகள் அஸ்வின், அலக்சன், சாகிசன், சாபிசா, சாதுசா, சசிகரன் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்னாரை இன்றைய தினம் நினைவு கூருகின்றனர்.

இன்று முதலாம் ஆண்டில் நினைவு கூரப்படும் கைலாசபிள்ளை ஜெயக்குமார் அவர்களை TRTதமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் நினைவு கூருகின்றனர்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு மகள் பேபி சிவா குடும்பத்தினர்

அவர்களுக்கும் எமது நன்றிகள்

ஓராண்டு இன்று ஓடி மறைந்தாலும் 

அப்பாவின் அன்பான நினைவுகள் மறைவது இல்லை 

கரம் கோர்த்து கல்லூரி கூட்டி செல்வதை சொல்லவா 

மடியில் அமர்த்தி மகிழ்வாய் சோறு ஊட்டியதை சொல்லவா 

நல்லாசிரியனாய் இருந்து நன்மை தீமை சொல்லியதை சொல்லவா

நல்ல நண்பனாய் இருந்து நன்மைகள் செய்ததை சொல்லவா 

கண்ணுக்கு அழகான கணவனை கரம் பற்ற வைத்ததை சொல்லவா 

அப்பா உங்களை பற்றி ஆயிரம் சொல்லலாம் 

இப்படி பல செய்து எம் மனதில்

இடம்  பிடித்த நீங்கள் எங்கு சென் றீர்கள் 

இனி எப்பிறப்பில் காண்போம் உங்களை 

இன்னோரு பிறவி இருந்தால் எங்கள்

தந்தையாய் வர வேண்டும் நீங்கள் 

ஓம் சாந்தி சாந்தி சாந்தி!

நன்றியுடன் அன்பு மகள் பேபி சிவா 

பகிரவும்...