Main Menu

மீன்பிடி கப்பலில் தீ விபத்து – 29 பேர் வைத்திய சாலையில் அனுமதி!

நோர்வேயில் மீன்பிடி கப்பல் ஒன்றில் ஏற்பட்டுள்ள தீ விபத்து காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 29 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மர்மான்ஸ்க் ட்ராவ்ல் ஃப்லீட் எனும் ரஷ்ய நிறுவனத்துக்கு சொந்தமான மீன்பிடிக் கப்பலிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது குறித்த கப்பலிலிருந்த 100 இற்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

எனினும் தீ விபத்து ஏற்பட்ட கப்பலிலிருந்து வெளியேறிய நச்சுப்புகையினை சுவாசித்த 29 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமோனியா கொள்கலனும் 2 இலட்சத்துக்கும் அதிகமான லிட்டர் டீசலும் கொண்டுள்ள குறித்த கப்பல் எந்நேரமும் வெடித்துச் சிதறக் கூடும் என்பதால், அதைச் சுற்றியுள்ள படகுகள், கப்பல்கள் அகற்றப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பகிரவும்...