Main Menu

மீண்டும் ஆர்ப்பாட்டம்! – அறிவித்த தொழிற்சங்கம்

மே தின ஆர்ப்பாட்டத்தை அடுத்து, மீண்டும் புதிய ஆர்ப்பாட்டத்துக்கு தொழிற்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

வரும் ஜூன் மாதம் 6 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இந்த வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை காலை Inter-Union தொழிற்சங்க ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இடையே இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின் முடிவில் இந்த வேலை நிறுத்தம் மற்றும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பிரதமர் Elisabeth Borne முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பில் Inter-Union தொழிற்சங்கத்தினர் கலந்துகொள்வார்களா என்பது தொடர்பில் பின்னர் ஆலோசிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது 

பகிரவும்...