Main Menu

திரையரங்கிற்கு படையெடுக்கும் பிரெஞ்சு மக்கள்

பிரான்சில் திரையங்கிற்குச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 19 மில்லியனுக்கும் அதிகமானோர் திரையரங்கிற்குச் சென்றுள்ளனர்.

கொவிட் 19 கட்டுப்பாடுகளுக்குப் பின்னர் பதிவாகியுள்ள அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும். ஏப்ரல் மாதத்தில் 19.01 மில்லியன் பேர் திரையரங்கிற்குச் சென்று திரைப்படங்களை பார்வையிட்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 37.8% சதவீத உயர்வாகும்.

ஏப்ரல் மாதத்தில் வெளியான திரைப்படங்களில் “les trois mousquetaires” திரைப்படமும், “l’honneur des voleurs” திரைப்படமும் அதிகளவான ரசிகர்களை திரையரங்கிற்கு இழுத்தது. 

பகிரவும்...