Main Menu

மாநில அரசின் விடுதலை பரிந்துரைக்கு ஆளுநர் மதிப்பளிப்பாரா – அற்புதம்மாள்

காந்தியின் 150-வது பிறந்தநாளில் மாநில அரசின் விடுதலை பரிந்துரைக்கு ஆளுநர் மதிப்பளிப்பாரா என அற்புதம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் மகாத்மாவை நினைவு கூர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மகாத்மாவின் பிறந்தநாளைக் குறிப்பிட்டு பேரறிவாளனின் விடுதலை குறித்து அவரின் தாயார் அற்புதம்மாள் ட்விட் செய்துள்ளார்.

அதில் ‘காந்தியின் 100-வது பிறந்த நாளில் நாடு முழுவதும் உள்ள 100 இற்கும் மேற்பட்டோரின் மரண தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

அவரின் 150-வது பிறந்தநாளில் மாநில அரசின் விடுதலை பரிந்துரைக்கு ஆளுநர் மதிப்பளிப்பாரா? எனது பிள்ளை வீடு திரும்புவானா?’ என குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...