Main Menu

மாணவர்களின் திறமைகளை மழுங்கடித்து திசை திருப்பும் முயற்சிகள் கச்சிதமாக அரங்கேற்றம் – சிவஞானம் சிறீதரன்

மாணவர்களின் திறமைகளை  மழுங்கடித்து திசை திருப்பும் முயற்சிகள் இந்த மண்ணிலே கச்சிதமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூர் தமிழ் வித்தியாலயத்தின் சிறுவர் பூங்காவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (26) கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கல்வியில் முன்னேற்றம் அடைவதன் மூலமே எமது இனத்தின் இருப்பை அடையாளப்படுத்தமுடியும். இதில் எமது சமுகம் முன்னிலை வகித்திருக்கின்றது. எதிர்காலத்தில் தடுக்கும் விதத்தில் இன்று இளம் சமுகத்தினரை சீரழிக்கின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை மாணவர்களின் திறமைகளை  மழுங்கடித்து திசை திருப்பும் முயற்சிகள் இந்த மண்ணிலே கச்சிதமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இதில் பாடசாலை முதல்வர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர்.

பகிரவும்...