Main Menu

19 ஆவது திருத்தம் நாட்­டுக்கு சாபக்­கேடு: ஜனா­தி­பதி

அர­சி­ய­ல­மைப்பின் 19ஆவது திருத்தச் சட் டம் நாட்­டுக்குச் சாபக்­கே­டாகும். அதனை ரத்­து­ செய்­ய­ வேண்டும். அடுத்த ஜனா­தி­பதித் தேர்­த­லுக்குள் அதனை ரத்து செய்­வதே நாட்­டுக்கு நன்மை பயக்கும். நாட்டில்  அர­சியல் ஸ்திர­மற்ற நிலை ஏற்­பட்­டுள்­ள­மைக்கு 

19ஆவது திருத்தச் சட்­டமே கார­ண­மாகும்.    அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் தேவைக்­கா­கவே சுமந்­திரன், ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரட்ன ஆகி­யோ­ரால் இந்தத்  திருத்தம்   கொண்­டு­

வ­ரப்­பட்­டது என்று  ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். 

அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­வீர்­களா என்று  கேள்வி எழுப்­பப்­ப­டு­கின்­றது. நான் 52 வரு­ட­ கால  அர­சியல் வாழ்க்­கையில் இருந்­தி­ருக்­கின்றேன். எதிர்­வரும்   தேர்தல் தொடர்பில்   சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி எத்­த­கைய முடிவை எடுக்­கின்­றதோ, அந்த முடி­வுக்­க­மை­யவே செயற்­ப­டுவேன்.  ஜனா­தி­பதித்   தேர்­த­லுக்­கான வேட்­பா­ளர்கள் தொடர்பில் இன்­னமும் எந்­த­வொரு கட்­சியும் முடி­வெ­த­னையும் எடுக்­க­வில்லை. எனவே இந்த விட­யத்தில் எத்­த­கைய அவ­ச­ரமும் தேவை­யில்லை என்றும் ஜனா­தி­பதி  சுட்­டிக்­காட்­டினார். 

பாரா­ளு­மன்றத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை  நான் நடத்­த­வுள்­ள­தாகக்   கூறப்­ப­டு­கின்­றது.  அவ்­வா­றா­ன­தொரு தீர்­மா­னத்தை நான் எடுக்­க­வில்லை.  அத்­த­கைய விடயம் தொடர்பில்  எவ­ரு­டனும் நான் ஆலோ­சிக்­க­வு­மில்லை என்றும்   ஜனா­தி­பதி  தெரி­வித்தார். 

தேசிய பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்கள் மற்றும் ஊடக நிறு­வ­னங்­களின் பிர­தா­னி­களை  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  ஜனா­தி­பதி மாளி­கையில்  நேற்று சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார்.   இதன்­போதே அவர்  இந்த விட­யங்­களை  எடுத்­துக் ­கூ­றினார். 

 இங்கு அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில் கூறி­ய­தா­வது:

தற்­போது  ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்பில்    பேசப்­பட்டு வரு­கின்­றது. ஜனா­தி­பதி தேர்­தலை எப்­போது நடத்­து­வது என்­பது  தொடர்பில்  தேர்­தல்கள் ஆணைக்­ கு­ழுவே நட­வ­டிக்கை எடுக்­க ­வேண்டும்.  தற்­போ­தைய நிலையில் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்கள் தொடர்பில் அர­சியல் கட்­சிகள்   இன்­னமும்   முடி­வு­களை எடுக்­க­வில்லை. வேட்­பா­ளர்கள் தொடர்பில் ஊகங்கள் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன. ஆனால் அதில் உண்­மை­யில்லை.  கட்­சி­க­ளுக்­கி­டையில் உள்­ளக ரீதி­யி­லேயே இது குறித்த  கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்று வரு­கின்­றன.  தற்­போ­தைய நிலையில் அர­சாங்கம் நிலைகுலைந்­துள்­ளது. அதேபோல் அர­சியல் கட்­சி­களும்  நிலை குலைந்தே உள்­ளன. 

சில மாதங்­களில் ஜனா­தி­பதித் தேர்தல் இடம்­பெ­ற­வுள்­ள­மை­யால் அதில் போட்­டி­யி­டு­வீர்­களா என்று என்­னிடம் கேள்வி எழுப்­பப்­ப­டு­கின்­றது. 52 வருட எனது அர­சியல் வாழ்க்­கையில் பல திருப்­பங்­களை நான் கண்­டுள்ளேன். பல மாற்­றங்­களைச்   சந்­தித்­துள்ளேன். இந்தத் தேர்­தலில் சிறி­லங்கா சுதந்­தி­ரக் ­கட்சி  என்ற ரீதியில்  கட்சி எடுக்கும்  முடி­வுக்கு அமை­யவே நான் செயற்­ப­டு வேன்.  இன்­றைய தினம் சிறி­லங்கா சுதந்­தி­ரக் ­கட்­சியின் மத்­தி­ய­கு­ழுக்­ கூட்டம் இடம்­பெ­ற­வுள்­ளது.  இந்த விடயம் தொடர்பில் சுதந்­தி­ரக் ­கட்சி ஏனைய கட்­சி­க­ளு­டனும்  கலந்­து­ரை­யாட­ வேண்­டி­யுள்­ளது.   ஜனா­தி­பதித் தேர்தல் விட­யத்தில் தற்­போது அவ­ச­ரப்­ப­ட ­வேண்­டிய  தேவை­யில்லை.  

18, 19 ஆவது திருத்­தங்கள்

கொழும்பு பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்­த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நான் சில தினங்­க­ளுக்கு முன்னர் ஆற்­றிய  உரை தொடர்பில் குற்­றச்­சாட்­டு­களும் விமர்­ச­னங்­களும் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.   18 ஆவது, 19 ஆவது  திருத்­தங்கள்  நாட்­டுக்கு  அழிவைத் தந்­தி­ருக்­கின்­றன.  அந்த நிலைப்­பாட்டில்  நான் இன்றும் உறு­தி­யாக உள்ளேன்.  18 ஆவது திருத்தம்   நாட்டில்  மன்னர் ஆட்­சி ­மு­றையைத்   தோற்­று­வித்­தது. இதற்கு  எதி­ரா­கவே  நல்­லாட்சி அர­சாங்­கத்தை நாம் உரு­வாக்­கினோம். ஆனால் 19 ஆவது திருத்த சட்டம்  நாட்டில்  அர­சியல் நிலை­யற்ற  தன்­மையை   ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. 

2015ஆம் ஆண்டு நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­றதும் பாரா­ளு­மன்­றத்தில் 215  பேரின் ஆத­ர­வுடன் இந்­தத்­ தி­ருத்­தத்தை    நிறை­வேற்­றி­யி­ருந்தோம். ஐக்­கிய தேசிய முன்­னணி, மஹிந்த அணி உட்­பட  பெரும்­பான்­மை­யா­னோரின் ஆத­ரவைப் பெற்­றி­ருந் தோம். 

தற்­போது மஹிந்த ராஜ­பக் ஷ  ஊட­கங்­களில் கருத்துத் தெரி­விக்­கும்­போது 18,19  திருத்­தங்­க­ளுக்கு அன்று  நான் ஒத்­து­ழைப்பு வழங்­கி­யி­ருந்தேன் என்று கூறி­யி­ருக்­கின்றார்.  18ஆவது திருத்தம் கொண்­டு­வ­ரப்­பட்­ட­போது நான் அந்த அர­சாங்­கத்தில் அமைச்­ச­ராக இருந்தேன். அதனால்  ஆத­ரித்தேன். 

19ஆவது  திருத்­தத்­தையும் நான் ஆத­ரிக்கும் நிலைமை. 

19ஆவது திருத்­த­மா­னது   ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரத்தை பாரா­ளு­மன்­றத்­துக்குக்  கைய­ளிக்கும் வகை­யி­லேயே தயா­ரிக்­கப்­பட்­டது.   இந்த விடயம்  உயர்  நீதி­மன்­றத்தின்  

பரி­சீ­ல­னைக்கு அனுப்­பப்­பட்­ட­போது  ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யால்   அதி­ல் உள்­ள­டக்கப்­பட்ட பல விட­யங்கள்   நிரா­க­ரிக்­கப்­பட்­டி­ருந்­தன.  ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரத்தைக்    குறைக்கும் விட­யத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய  விட­யங்­களைக் கொண்டே அது நிறை­வேற்­றப்­பட்­டது. இதனால் அந்தச் செயற்­பாடு முற்­று­மு­ழு­தாக வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. இதனைத் தயா­ரித்­த­வர்கள்   சட்ட அர­சி­யல்­வா­தி­க­ளா  அல்­லது  சட்ட நிபு­ணர்­களா என்­பது எனக்குத் தெரி­யாது. 

இதன்­ மூலம் ஜனா­தி­ப­திக்கு ஒரு பகுதி அதி­கா­ரமும் பாரா­ளு­மன்­றத்­துக்கு ஒரு பகுதி அதி­கா­ரமும் சென்­றன. சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் அமைக்­கப்­பட்­டதன் மூலமும்  எதிர்பார்த்த பயன் கிட்­ட­வில்லை.   அர­சாங்­கத்­துக்கு அறி­விக்­கா­ம­லேயே   இலங்கை மனித  உரிமை ஆணைக்­குழு   தனது அறிக்­கை­யை ஜெனி­வா­வுக்கு  அனுப்­பி­யி­ருந்­தது.  19ஆவது திருத்­த­மா­னது நிலை­யற்ற அர­சியல் தன்­மையை   நாட்டில் உரு­வாக்­கி­ய­துடன் இரண்டு அர­சியல் தலை­மை­க­ளையும்   ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. 

இரண்டு சார­தி­களின் செயற்­பாடு

 இந்த விடயம் தொடர்பில்   பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும்  கருத்துத் தெரி­வித்­துள்ளார்.  அர­சாங்கம் என்ற வாக­னத்தை  இரண்டு சார­திகள்  செலுத்த முடி­யாது  என்று  அவர்  கூறி­யி­ருக்­கின்றார். ஜனா­தி­பதித் தேர்­தலில்  மக்கள் சாரதி  ஒரு­வ­ருக்­குத்தான்   ஆணை வழங்­கி­யி­ருந்­தனர்.  ஆனால்  அந்த ஆணை­யை பாரா­ளு­மன்­றத்தின் மூலம் எடுத்­துக்­கொண்டு வாக­னத்தின் முன் ஆச­னத்தில்  மற்­றொ­ருவர் இருந்­து­ கொண்டார். 

62 இலட்சம் மக்­களின்  வாக்­குகள் மூலம் அனுமதிப் பத்திரம் பெற்ற சார­தி வாகனத்தை செலுத்தும் போது பாரா­ளு­மன்­றத்தின் மூலம் அதி­கா­ரத்தைப் பெற்ற சாரதி முன் ஆசனத் தில் அமர்ந்து கொண்டு அதனை  செலுத்த  முயற்­சிக்­கின்றார். அந்தச் சாரதி வாக­னத்தின்  கியரைப் போடு­வ­துடன் ஸ்டேரிங்­கையும் பிடித்து அங்­கு­மிங்கும் செலுத்த முயற்­சிக்­கின்றார்.  இந்த நிலைதொடர முடி­யாது. இத­னால் தான் 19 ஆவது திருத்­தத்­தை  ரத்துச் செய்­ய­வேண்டும் என்று நான் கூறு­கின்றேன். அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் யார் போட்­டி­யிட்­டாலும்   ரணில்  போட்­டி­யிட்­டாலும்  தேர்­த­லுக்கு முன்னர்  இந்தத் திருத்­தத்­தை ரத்துச் செய்­ய­ வேண்டும். இரண்டு சார­திகள், இரண்டு அர­சாங்­கங்கள்  ஆட்சி செய்­வதை   இல்­லா­தொ­ழிப்­ப­தற்கு இதுவே ஒரேவழி­யா கும். ஜனா­தி­பதி மாளி­கையில் ஓர் அர­சாங்­கமும்  அல­ரி­ மா­ளி­கையில் மற்றோர் அர­சாங்­கமும் செயற்­ப­டு­கின்­றன. 

2015ஆம் ஆண்டு ஏப்ரல் 28,29ஆம் திக­தி­களில் 19ஆவது திருத்தச் சட்டம்  சமர்ப்­பிக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டது. மாலை 5 மணிக்கு வாக்­கெ­டுப்பு  என்று கூறப்­பட்டு இழு­ப­றி­க­ளுக்கு மத்­தியில் 7 மணிக்கு வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது. இதற்கு 215 பேர் ஆத­ர­வாக வாக்­க­ளித்­தனர். எனவே யாரும் தாம் தவ­றி­ழைக்­க­வில்லை என்று கூறி தப்­பித்­து­விட முடி­யாது. 

19 ஆவது திருத்தம் நாட்­டுக்கு சாபக்­கேடு

நாட்டை  முன்­னேற்­ற­ வேண்­டு­மானால்  19ஆவது திருத்த சட்­டத்­தை ரத்து செய்­ய­வேண்டும். இன்னும் சில மாதங்­களில் ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளது.  அதனைத் தொடர்ந்து பாரா­ளு­மன்றத் தேர்­தலும் நடை­பெறும். எனவே அதற்கு முன்னர்  இந்தத் திருத்­தத்தை  இரத்து செய்­ய­ வேண்டும். 19 ஆவது திருத்தம்  நாட்­டுக்கு சாபக்­கே­டாகும்.  அரச சார்­பற்ற தொண்டு நிறு­வ­னங்­களின் தேவை­க­ளுக்­கா­கவே இது  தயா­ரிக்­கப்­பட்­டது. நாட்­டுக்கும் மக்­க­ளுக்கும்  இது உத­வப் ­போ­வ­தில்லை. தேர்­த­லுக்கு  இன்­னமும் நான்கு மாதங்கள் இருக்­கின்­றன. அதற்குள்  பிர­தமர் ரணில்,   சம்­பந்தன்,  மஹிந்த   மற்றும் ஜே.வி.பி.யினர்  ஒரு­மித்த நிலைப்­பாட்டை அடுத்து 19ஆவது திருத்­தத்தை ரத்துச் செய்ய வேண்டும். இதன் மூலமே 2020ஆம் ஆண்டில் நாடு முன்­னேற்­றத்தை அடைய முடியும். இல்­லா­விட்டால் நாடு  அத­ல­பா­தா­ளத்­துக்குள்  செல்லும். 

சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு

தற்­போது  நான்  சர்­வ­ஜ­ன ­வாக்­கெ­டுப்பை  நடத்­தப்­போ­வ­தாக   ஊட­கங்­களில் செய்தி வரு­கின்­றது. பாரா­ளு­மன்றத் தேர்­தலை நடத்­து­வ­தற்­காக இத்­த­கைய செயற்­பாட்டை மேற்­கொள்­ள­வுள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது.  நான் அவ்­வாறு தீர்­மா­னிக்­க­வில்லை. அவ்­வா­றா­ன­தொரு எண்­ணமும் என்­னிடம் இல்லை. இவ்­வி­டயம் குறித்து நான் யாரு­டனும் கலந்­து­ரை­யா­டவும் இல்லை. 

போதைப்பொருள் ஒழிப்­பு­ வாரம்

நாட்டில் சட்­ட­வி­ரோத போதைப்பொருட்­களை ஒழிப்­ப­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை  எடுத்­துள்­ளது.  இதற்­கென போதைப்­பொருள் வாரம் தற்­போது அனுஷ்­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது. நாட்டில்  மூன்று இலட்சம்  பேர் ­வ­ரையில் போதைப்பொருள் பாவ­னைக்கு அடி­மை­யா­கி­யுள்­ளனர்.  சிறைச்­சா­லை­களில்   11 ஆயிரம் கைதி­க­ளையே தடுத்­து­ வைக்க முடியும். ஆனால் 24 ஆயிரம் கைதிகள் சிறை­களில் உள்­ளனர். இவர்­களில்  60 வீத­மா­ன­வர்கள் சட்­ட­வி­ரோத போதைப்பொருள் பாவ­னை­யுடன் தொடர்­பு­டை­ய­வர்கள்.  இன்று  26ஆம் திகதி போதைப்பொருள் எதிர்ப்பு தின­மாகும்.  இதனை முன்­னிட்டும் பல்­வேறு  நிகழ்­வு­களை   நாம் ஏற்­பாடு செய்­துள்ளோம். 

வெளி­நாட்டுப் பய­ணங்கள் தொடர்பில்  தவ­றான செய்­திகள்

எனது வெளி­நாட்டுப் பய­ணங்கள் தொடர்பில்  தவ­றான செய்­திகள்   வெளி­யி­டப்­பட்டு வரு­கின்­றன.  நான் வெளி­நா­டு­க­ளுக்குச் செல்லும் போது 10 பேருக்­குட்­பட்­ட­வர்­க­ளையே அழைத்துச் செல்­கின்றேன்.  அண்­மையில் நான் தஜி­கிஸ்தான் சென்று திரும்­பி­ய­போது  50 பேருடன் நான் விஜயம் செய்து நாடு திரும்­பு­வ­தாக வானொ­லி­களில்    செய்திகள் ஒலி­ப­ரப்­பப்­பட்டு வந்­தன. இவ்­வா­றான செய்­திகள் எங்கு தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன என்­பதை நான் அறிவேன்.  வெள்­ளை­நிற  பூக்கள் பூக்கும்  இடத்­தி­லி­ருந்­துதான்  இத்­த­கைய செய்­திகள் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன. நான் வெளி­நாட்டுப் பய­ணங்­களை மேற்­ கொண்டால் அதன்­மூலம் நாட்­டுக்கு பய னைப் பெற்றே வரு­கின்றேன்.  

இந்­தியப் பிர­த­மரின் பத­வி­யேற்­புக்குச் சென்ற போது   அவ­ருடன்  நான் தனித்து கலந்­து­ரை­யா­டினேன்.  நாட்டு நிலைமை தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­போது ஐந்து நிமி­டங்கள் எமது நாட்­டுக்கு வருகை தந்து செல்­ல ­வேண்டும் என்று அவ­ரிடம் கேட்­டுக்­கொண்டேன். அவரும் அதனை ஏற்­றுக்­கொண்டார். மாலைதீவுக்கு சென்­று­விட்டு நாடு ­தி­ரும்பும் வழியில் அவர்  மூன்று மணி­ நேரம் விஜயம் செய்­தி­ருந்தார். இதன் மூலம் குண்­டுத் ­தாக்­கு­தலில்  பாதிக்­கப்­பட்­டி­ருந்த  எமது நாட்டின் பாது­காப்பு தொடர்பில்   உல­கிற்கு செய்தி   தெரி­விக்­கப்­பட்­டது. அவ­ரது விஜயம் சொல்ல முடி­யாத அள­வுக்கு­ பெ­று­ம­தி­ வாய்ந்­த­தாக அமைந்­தது. 

இதே­போன்றே சீனா­வுக்கு நான் விஜயம் செய்­த­போதும் சீன ஜனா­தி­ப­தி­யு­ட­னான பேச்சின் போது  பாது­காப்பு தரப்­புக்கு   100 ஜீப்கள் வேண்டும் என்று கேட்டேன். உட­ன­டி­யா­கவே அவர் நட­வ­டிக்கை எடுத்தார். இதே­போன்றே  கஜ­கஸ்­தானில்   ரஷ்ய ஜனா­திபதி புட்­டி­னுடன்    பேச்­சு­வார்த்தை நடத்­தினேன். 

ஆறு மாதங்­க­ளுக்கு முன் ரஷ்­யா­வி­ட­மி­ருந்து  உத­வி­களைப் பெற ­வேண்டாம் என்று   அமெ­ரிக்கா தெரி­வித்­தி­ருந்­தது. 1971ஆம் ஆண்டு திரு­மதி சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க ஆட்சிக் காலத்தில்  சேகு­வரா  கல­வ­ரத்­தின்­போது  ரஷ்யா மூன்று மிக் விமா­னங்­களை எமக்கு தந்­து­த­வி­யி­ருந்­தது. அந்த  விமா­னங்கள் இன்­னமும் விமா­னப்­ப­டை­யி­ன­ரிடம் உள்­ளன.  அமெ­ரிக்கா சொன்­னதை செய்­யா­விடின் சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் நிதி உத­விகள் உட்­பட பல விட­யங்கள்  நிறுத்­தப்­படும் சூழல் உள்­ளது.  இருந்­த­போ­திலும்  அமெ­ரிக்­கா­வு­ட­னான சோபா ஒப்­பந்தம்,   அமெ­ரிக்க இரா­ணு­வத்­தினர் தொடர்­பான ஒப்­பந்தம் என்­ப­வற்­றுக்கு நான் எதிர்ப்பு தெரி­வித்தேன். 

 எனவே எனது வெளி­நாட்­டுப் ­ப­ய­ணங்கள் தொடர்பில் போலி­யான தக­வல்­களை ஊட­கங்­களை வெளி­யி­டு­வதைத்  தவிர்க்­க­வேண்டும்.

கொழும்பு  கிழக்கு இறங்­கு­துறை விவ­காரம்

கொழும்பு கிழக்கு இறங்­கு ­து­றையின்   அபி­வி­ருத்­தியில் இந்­தியா, ஜப்பான்,  இலங்­கையை உள்­ள­டக்­கு­வது தொடர்பில்    ஒப்­பந்தம் செய்­யப்­பட்­டுள்­ளது.  இதற்கு ஆரம்­பத்தில் நான் எதிர்ப்பு தெரி­வித்தேன்  ஏனெனில் இலங்­கைக்­கான வீதம் குறித்து தெரி­விக்­கப்­ப­டாமல் ஜப்பான் இதனை முழு­மை­யாக பெறு­வ­தற்கு முயற்­சித்­தி­ருந்­தது. ஆனால் எனது எதிர்ப்பின் பின்னர்  இலங்­கைக்கு 51 வீதமும்  இந்­தி­யா­வுக்கு 11 வீதமும் ஜப்­பா­னுக்கு ஏனைய வீதமும் வழங்­கப்­படும் வகையில் இந்தத் திட்டம்  முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. 

கேள்வி:  ஜனா­தி­பதித் தேர்­தலில்  எத்­த­கைய முடி­வை எடுப்­பது என்­பது குறித்து சுதந்­தி­ரக்­கட்­சியின் தீர்­மா­னத்­துக்கு அமை­யவே செயற்­ப­டுவேன் எனக் கூறி­யுள்­ளீர்கள்.  அவர்கள்  உங்­களைப் போட்­டி­யி­டு­மாறு கோரினால் என்ன செய்­வீர்கள்?

பதில்: இந்த விடயம் தொடர்பில் சுதந்­தி­ரக்­கட்சி   கலந்­து­ரை­யாடி வரு­கின்­றது.  ஏனைய கட்­சி­க­ளு­டனும்  பேசித்தான்  இந்த விடயம் தொடர்பில்  முடி­வெ­டுக்­க ­வேண்­டி­யுள்­ளது.  

கேள்வி:  19ஆவது திருத்தச்  சட்டம் ரத்­து ­செய்­யப்­ப­ட­ வேண்­டு­மென்று கூறு­கின்­றீர்கள்.  தற்­போ­தைய நிலையில் இரு கட்­சிக்­கொள்கை  முரண்­பாட்­டில்தான்  பிரச்­சினை  ஏற்­பட்­டுள்­ள­தா­கவே தெரி­கின்­றது இது குறித்து உங்­களின் பதில் என்ன?

பதில்: அவ்­வாறு இல்லை. அர­சி­ய­ல­மைப்பின் படி   இரண்டு தலை­வர்கள் தற்­போது நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். இத­னால்தான் முரண்­பா­டுகள்  ஏற்­ப­டு­கின்­றன.  

கேள்வி: 19 ஆவது திருத்தச் சட்டம் நிறை­வேற்­றப்­படும் போது பெரும்­பான்மை உங்­க­ளிடம் உள்­ளது. அவ்­வா­றாயின்  அதனை  ஏன் ஆத­ரித்­தீர்கள்?

பதில்: அர­சி­ய­ல­மைப்­பிலே நடை­மு­றைப்­ப­டுத்­தும்­போ­துதான் அதிலுள்ள நன்மை தீமைகள் தெரி­ய­வரும்.  ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும்  அதி­கா­ரங்கள்  50க்கு 50 வீதம் இதன் மூலம் பகி­ரப்­பட்­டுள்­ளன.  ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரத்தை நீக்கி பாரா­ளு­மன்­றத்­திற்கு முழு­மை­யாக  வழங்­கி­யி­ருந்தால் பர­வா­யில்லை.  யாரா­வாது ஒரு­வ­ருக்கு அதி­காரம்   வழங்­கப்­பட்­டி­ருக்­க வேண்டும்.  இத­னால்தான் நாம் தவ­றி­ழைத்­து­விட்டோம் என்­பதை  நாம் ஏற்­றுக்­கொள்­கின்றோம். அதனை சரி செய்­ய ­வேண்டும். 

 கேள்வி: 19ஆவது திருத்த யோச­னையில்  தெரி­விக்­கப்­பட்ட பல விட­யங்கள் தொடர் பில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­த­ வேண்­டு­மென்று உயர்­ நீ­தி­மன்றம் தெரி­வித்­தி­ருந்­தது.  இந்த நிலையில்  எவ்­வாறு  திருத்தம் நிறை­வேற்­றப்­பட்டது?

பதில்: 19ஆவது திருத்தம் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின்    கோரிக்­கைக்கு அமைய செய்­யப்­பட்ட அர­சியல் சதி­யாகும்.  பாரா­ளு­மன்­றத்தில்  முன்­வைக்­கப்­பட்ட   யோச­னைகள்   வர்த்­த­மானி பிர­க­ட­னத்­தின்­போது மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டி­ருந்­தன. 

கேள்வி: 18 ஆவது, 19ஆவது திருத்­தங்­களை ரத்து செய்­ய­ வேண்டும் என்று கூறு­கின்­றீர்கள். அப்­ப­டி­யானால் புதிய அர­சியல் யாப்பு உரு­வாக்­கப்­ப­ட ­வேண்­டு­மென்றா கோரு­கின்­றீர்கள்?

பதில்:புதிய அர­சி­யல் ­யாப்பு தேவை­யில்லை. இவற்றை நீக்­கி­விட்டால் பழைய  அர­சியல் யாப்பு அமு­லுக்கு வரும். அதனை நடை­மு­றைப்­ப­டுத்­தினால் போதும்.   எதி­ர­ணி­யினர்  கூறு­கின்­றனர்  19ஆவது திருத்­தத்தை ரத்து செய்­வ­துடன் 18ஐ நடை­மு­றைப்­ப­டுத்­தலாம் என்று. ஆனால் இரண்­டையும்  ரத்து செய்­ய­வேண்டும். 

கேள்வி: குரு­ணாகல் வைத்­தியர் கருத்­தடை குற்­றச்­சாட்டின் கீழ் கைது செய்­யப்­பட்­டுள் ளார். மருத்­துவ அதி­கா­ரிகள் சங்கம் இவ்­வி­டயம் தொடர்பில் ஜனா­தி­பதி ஆணைக்­குழு விசா­ரணை செய்­வது  நல்­லது என்று கோரி­யுள்­ளனர்.  இது குறித்து  உங்­களின் கருத்­தென்ன?

பதில்: ஆணைக்­குழு  விடயம் தொடர்பில்  தீர்­மா­னிக்க முடி­யாது. அரச மருத்­துவ சங்­கத்தின் குழு இவ்­வி­டயம் தொடர்பில்  விசா­ரித்­துள்­ளது.  நீதி­மன்றில் முன்­னெ­டுக்­கப்­படும் விட­யங்­க­ளுக்கு சட்­ட­ வைத்­திய அதி­கா­ரியின் அறிக்­கை­களே முக்­கி­ய­மா­ன­வையாகும்.   500 தொடக்கம் 600 பெண்கள்  கருத்­தடை செய்­யப்­பட்­ட­தாகக் கூறு­கின்­றனர்.  ஆனால்  இந்த விடயம் தொடர்பில் சட்ட வைத்­திய அதி­கா­ரியின்   அறிக்­கையின் ஊடா­கவே தீர்­மா­னிக்க முடியும். 

கேள்வி: சிறி­லங்கா சுதந்­தி­ரக் ­கட்­சிக்கும் சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­ன­வுக்­கு­மி­டையில்   இணக்­கப்­பாடு   ஏற்­ப­டு­வதில் சிக்கல் நிலை  காணப்­ப­டு­கின்­றதா?

பதில்: பேச்­சு­வார்­த்தை நடத்­தப்­ப­டு­கின்­றது. தேர்­தல்கள் நெருங்­கும்­போது இவ்­வி­ட­யங்கள் தொடர்பில் தீர்வைக் காணலாம். 

கேள்வி: சில மாதங்­களில் ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெறும் என்று நீங்கள் கூறு­கின்­றீர்கள்.  இந்­தி­யாவில்  அதற்­கான திக­தி­யையும்  நீங்கள் கூறி­யி­ருந்­தீர்கள். ஆனால் சுதந்­தி­ரக் ­கட்­சியின் செய­லாளர் தயா­சிறி ஜய­சே­கர  அடுத்த வருடம்  ஆகஸ்ட் மாதமே உங்­களின் பத­விக்­காலம் முடி­வ­டை­வ­தாக கூறி­யுள்ளார்?

பதில்:  அது குறித்து எனக்குத் தெரி­யாது.  19ஆவது திருத்­தத்தில் மே மாதம் 15ஆம்

தி­கதி தான் சபா­நா­யகர் கையெ­ழுத்­திட்டார்.  எனவே அடுத்த மே மாதம் 15ஆம் திகதி வரை   தற்­போ­தைய ஜனா­தி­ப­தியின் பத­விக்­காலம் உள்­ளது என்ற தர்க்கம் இருக்கின்றது. இந்த விடயம் தொடர்பில் சட்ட வல்லுநர்கள் மத்தியில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. 

கேள்வி: 19ஆவது திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தற்போது கூறுகின்றீர்கள். கடந்த நான்கு வருடங்களாக  இது குறித்து ஏன் நீங்கள் கவனம் செலுத் தவில்லை?

பதில்: தற்போதுதான் தேர்தல்கள் நடைபெற வுள்ளன. புதிய அரசாங்கம் பதவியேற்பதற்கு முன்னர்  இதனை ரத்து செய்ய வேண்டும் என்றுதான்  நான்  கூறுகின்றேன். அதிகாரங்கள் இரு இடங்களில் குவிந்திருப்பதனால்  அரசி யல் நடவடிக்கைகளைத் தொடர முடியாது. 

கேள்வி: ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் னர்  மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டுமென்றும்  இல்லையேல் தான் பதவி விலகப்போவதாகவும்  தேர்தல்கள் ஆணை க் குழுவின் தலைவர் அறிவித்துள்ளாரே… அது குறித்து உங்களின் கருத்து என்ன?

பதில்: அது குறித்து   என்னால்  ஒன்றுமே கூற முடியாது. 

கேள்வி: தற்போது நாட்டின் பாதுகாப்பு  நிலைமை தொடர்பில் நீங்கள் திருப்தி அடை கின்றீர்களா?

பதில்: நான் திருப்தி அடைகின்றேன்.   தீவிர வாதக் குழு முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்கள்   கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் செயற்பாடு 2012ஆம் ஆண்டு  ஆரம்பிக்கப்பட்டு ஏழு வருடங்கள்  இடம் பெற்றுள்ளது.  முழுமையாக அனைவரும்  கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு  உறு திப்படுத்தப்பட்டுள்ளது. 

கேள்வி:  வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்த போது அவசரகால சட்டம் நீடிக்கப்பட மாட்டாது என்று கூறியிருந்தீர்கள்.  ஆனால் நீடிக்கப்பட்டுள்ளதே?

பதில்: கைது செய்யப்பட்டவர்களை தொடர்ந் தும் விசாரிப்பதற்கும் தூதுவராலயங்கள், இராஜதந்திர இல்லங்கள் உட்பட முக்கிய இடங்களுக்கு  இராணுவத்தினரின் பாது காப்பை வழங்குவதற்கு  அவசர கால சட் டம் நடைமுறையில் இருக்க வேண்டியது அவசியம்.  சட்டவிரோத அமைப்புகளை தடை செய்வதற்கும் அதற்கான சட்டங்களை உருவாக்கும் வரையிலும் இதனை  அமுல் செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது.  இன்னும் ஒரு தடவைக்கு மேல்  இதனை  நீடிக்கும் உத்தேசம் இல்லை. 

பகிரவும்...