Main Menu

மலேசியாவில் 25 தமிழக மாணவர்கள் சிக்கித் தவிப்பு

மலேசியாவில் மருத்துவம் பயிலும் 25 தமிழக மாணவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து விமானங்கள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையால், பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் பயின்று வரும் 200 இந்திய மாணவர்கள், மலேசியா வழியாக இந்தியா வரும்போது தடுத்து நிறுத்தப்பட்டு அங்கேயே 30 மணி நேரத்திற்கும் மேலாக தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மலேசியாவில் மருத்துவம் பயின்று வரும் தமிழக மாணவர்கள் 25 பேரும், மத்திய அரசின் தடையால் இந்தியா வர முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, விமானம் மூலம் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகிரவும்...