Main Menu

மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் பொறுப்புக்கள் அன்பழகனுக்கு வழங்கப்பட்டன!

மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் அமைச்சுப் பொறுப்புக்கள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று, கே.பி.அன்பழகனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கே.பி.அன்பழகன், உயர் கல்வித்துறை மற்றும் வேளாண் துறை அமைச்சராகப் பணியாற்றவுள்ளார்.

கொரோனா தொற்றினால் உயிரிழந்த அமைச்சர் துரைக்கண்ணு, வேளாண்மை, வேளாண் என்ஜீனியரிங், பட்டுப்பூச்சி வளர்ப்பு, கரும்பு வளர்ச்சி மற்றும் தரிசு நில மேம்பாடு உள்ளிட்ட துறைகளுக்குப் பொறுப்பாக இருந்தார்.

எனவே, இத்துறைகளை உயர் கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் கவனிக்கவுள்ளார் என ஆளுநர் மாளிகை குறிப்பிட்டுள்ளது.

பகிரவும்...