Main Menu

மறுவாக்கு எண்ணிக்கை நடத்த சட்ட நடவடிக்கை: 60 மில்லியன் டொலர்கள் நிதி திரட்ட ட்ரம்ப் முயற்சி!

ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பிடன் முன்னிலை வகித்துவரும் சில மாகாணங்களில், மறுவாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளுக்காக, 60 மில்லியன் டொலர்கள் நிதி திரட்ட குடியரசு கட்சி முயற்சிசெய்து வருகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 270 இடங்கள் பெறவேண்டும் என்ற நிலையில் ஜோ பிடன் 264 இடங்களைப் பெற்றுள்ளார். டொனால்ட் ட்ரம்ப் 214 இடங்களில் வெற்றிபெற்றுள்ளார்.

இந்நிலையில், பென்சில்வேனியா, ஜோர்ஜியா, நெவாடா, வட கரோலினா மற்றும் அலாஸ்கா ஆகிய ஐந்து மாநிலங்களில் இன்னும் வாக்கு எண்ணிக்கை முடிவடையாமல் நீடித்து வருகிறது.

எனினும், இதுவரை டொனால்ட் ட்ரம்புக்கு சாதகமாக இருந்த ஜோர்ஜியா மற்றும் பென்சில்வேனியாவில் ஜோ பிடன் தற்போது முன்னிலை பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் 50 மாகாணங்களில் இதுவரை 46 இடங்களில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஜார்ஜியா, பென்சில்வேனியா, வடக்கு கரோலினா, நவேடா ஆகிய 4 மாகாணங்களில், வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வந்த நிலையில் ஜார்ஜியா, பென்சில்வேனியா மாகாணங்களில் ஜோ பிடன் முன்னிலை வகிப்பதாக செய்திகள் வெளியாகின.

தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். ஜார்ஜியா மாகாணத்தில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை நடத்தக் கோரி நீதிமன்றத்தில் ட்ரம்ப் தொடந்த வழக்கு தள்ளுபடியான நிலையில், ஜார்ஜியா மாகாண அராசங்கம் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த அனுமதி அளித்துள்ளது.

ஜோ பிடன் முன்னிலை வகித்து வரும் மேலும் சில மாகாணங்களிலும், மறுவாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளை ட்ரம்ப் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், ட்ரம்ப் மேற்கொண்டுவரும் சட்ட நடவடிக்கைகளின் செலவுகளுக்காக குடியரசு கட்சியின் சார்பில் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அக்கட்சியினர் கொடையாளிகளிடம் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், சுமார் 60 மில்லியன் டொலர்கள் நிதி திரட்ட அவர்கள் முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பகிரவும்...