Main Menu

மன்னார் ஆயரை சந்தித்து கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ்

மன்னாருக்கு இன்று (சனிக்கிழமை) விஜயத்தை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி பிடலிஸ் லயனல் இமானுவேல் பெர்னான்டோ ஆண்டகையை இன்று மாலை 5 மணியவில் மன்னார் ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

நாட்டின் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பிலும் கடற்றொழில் அமைச்சினால் மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடியுள்ளார்.

மேலும் மன்னார் மறை மாவட்டத்தில் தற்போதைய நிலவரம் தொடர்பாகவும் அமைச்சர் ஆயரிடம் கேட்டு அறிந்து கொண்டார்.

இந்த சந்திப்பில் மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...