மகேஸ் சேனநாயக்க தெரிவுக்குழுவில் முன்னிலை!
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க முன்னிலையாகியுள்ளார்.
சற்றுமுன்னர் அவர் அங்கு முன்னிலையாகியுள்ள நிலையில், தற்போது சாட்சியம் வழங்கி வருகிறார்.
இதற்கு முன்னரும் அவர் தெரிவுக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கியுள்ளார். இந்நிலையில், மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக அவர் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.