Main Menu

மகியங்கனையில் விபத்து – 10 பேர் பலி

இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 3 குழந்தைகள் 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மகியங்கனை – பதுளை பிரதான வீதியின் மகியங்கனை தேசிய பாடசாலையின் முன்னால் இன்று (17.04.2019 )அதிகாலை 1.35 அளவில் தனியார் பேருந்து ஒன்றும் வான் ஒன்றும் நேருக்குநேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டள்ளது . மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

வான் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே, விபத்துக்கான காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ள நிலையில் பேருந்து வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிரவும்...