போலி ஆவணம் மூலம் மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர முயற்சி
மதுரை மருத்துவக் கல்லூரியில் போலியான ஆவணம் மூலம் சேர முயன்ற 2 பேரை பிடித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மருத்துவக் கல்லூரி இடங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டு தற்போது கல்லூரி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நேற்று மதியம் ஆந்திராவை சேர்ந்த பன்னுவா ரியாஸ் மற்றும் பீகாரை சேர்ந்த நிதிவரதன் ஆகிய இருவரும் இக்கல்லூரியில் சேருவதற்கான உத்தரவை எடுத்து வந்திருந்தனர்.
இதனை ஆய்வு செய்த கல்லூரி நிர்வாகத்தினர் இந்த உத்தரவு போலியாக கொடுக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்து உடனடியாக தல்லாகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தனர்.
அங்கு வந்த பொலிஸார் ஆவணங்களை கொண்டு வந்த இருவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் டெல்லியை சேர்ந்த ஒருவர் 16 இலட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு போலியான உத்தரவை தங்களுக்கு அளித்து ஏமாற்றி உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த மோசடி குறித்து தல்லாகுளம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.