Main Menu

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

லைகா புரொடக்ஷன்ஸ்  வழங்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கும் இந்த  திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு வருகிறது. முதல் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்கியின் வரலாற்று பதினத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார்.  ஜெயம் ரவி, த்ரிஷா, கார்த்தி, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பகிரவும்...