Main Menu

நிலவில் தண்ணீர் உள்ளது உண்மையா? – நாசா வெளியிட்ட புதிய தகவல்

நிலவின் சூரிய ஒளி மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிர்வாகம் (நாசா) நேற்று (திங்கட்கிழமை) உறுதி செய்துள்ளது.

நாசாவின் பறக்கும் ஆய்வகமான சோஃபியா நிலவில் சூரிய ஒளி மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், சந்திரனின் தெற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள பூமியிலிருந்து தெரியும் மிகப்பெரிய பள்ளங்களில் ஒன்றான ‘கிளாவியஸ்’ பள்ளத்தில் தண்ணீரின் மூலக்கூறுகளை சோஃபியா கண்டறிந்துள்ளது என தெரிவித்துள்ளது.

மேலும் சந்திரனின் சூரிய ஒளி மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்துள்ளதாகவும் இது அதிகளவில் இருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சந்திரயான் -1 விண்கலம் கடந்த 2009ஆம் ஆண்டில் சந்திரனின் மேற்பரப்பில் முதன்முதலில் தண்ணீரைக் கண்டுபிடித்தது.

இருப்பினும் ஆராய்ச்சியாளர்களால் அது நீரின் மூலக்கூறா அல்லது ஹைட்ராக்சில் மூலக்கூறா என்பது தொடர்பாக கணிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...