Main Menu

பொது நிகழ்வில் முகக்கவசம் இன்றி கலந்து கொண்ட வடக்கு ஆளுநர்

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், முகக்கவசம் அணியாமல் பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டமைக்கு பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை)  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது குறித்த நிகழ்வுகள் சிலவற்றில் பங்கேற்றிருந்த வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதமை பலராலும் அவதானிக்க கூடியதாக இருந்துள்ளது.

நாட்டில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் முகக்கவசங்களை சரியான முறையில் அணியாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நிலையில் வடக்கு மாகாண ஆளுநர் பொது நிகழ்வொன்றில் முகக்கவசம் அணியாது கலந்து கொண்டுள்ளார்.

இவ்விடயத்தில் அவருக்கு எதிராக  பொலிஸாரோ சுகாதார பிரிவினரே எவ்வித நடவடிக்கையும் எடுக்காதமைக்கு  பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...